/* */

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் தண்டராம்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் விபத்தில் உயிரிழப்பு
X

கார் மோதியதில் உயிரிழந்த  ராணுவ வீரர்   சத்யராஜ்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சொக்கநாதன் கிராமம் வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 25). பஞ்சாபில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சினேகா (20). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது.

விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் சத்யராஜ் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் காட்டாம்பூண்டி கிராமத்தில் மாமனார் வீட்டில் உள்ள தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றார்.

ராதாபுரம் கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திருவண்ணாமலை நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சினேகா கொடுத்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் தினகரன் என்பவரை கைது செய்தனர்.

Updated On: 27 March 2022 3:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’