Begin typing your search above and press return to search.
நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் பிடிபட்டனர்
ஆரணியில் நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.
HIGHLIGHTS
ஆரணியை அடுத்த கொசப்பாளையம் பெரிய சாயக்காரத் தெருவை சேர்ந்தவர் ஏ.எம்.ரஞ்சித். தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர். இவரது வீட்டின் பின்பகுதியில் திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டாரை 2 வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
அப்போது அந்த வீட்டில் வேலை செய்யும் சித்தேரி கிராமத்தை சேர்ந்த பக்தன் என்பவர் அவர்களை பிடித்து, இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துணை ஆய்வாளர் பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் ஆரணி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 21), கொசப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் (19) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து மோட்டாரை பறிமுதல் செய்தனர்.