/* */

நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் பிடிபட்டனர்

ஆரணியில் நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.

HIGHLIGHTS

நீர்மூழ்கி மோட்டார் திருடிய வாலிபர்கள் பிடிபட்டனர்
X

ஆரணியை அடுத்த கொசப்பாளையம் பெரிய சாயக்காரத் தெருவை சேர்ந்தவர் ஏ.எம்.ரஞ்சித். தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர். இவரது வீட்டின் பின்பகுதியில் திறந்தவெளியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டாரை 2 வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அப்போது அந்த வீட்டில் வேலை செய்யும் சித்தேரி கிராமத்தை சேர்ந்த பக்தன் என்பவர் அவர்களை பிடித்து, இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் துணை ஆய்வாளர் பிடிபட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் ஆரணி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஜீவா (வயது 21), கொசப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த தியாகராஜன் (19) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?