/* */

ஆரணி: கடைகளில் புகையிலை விற்ற 2 வியாபாரிகள் கைது

ஆரணியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆரணி: கடைகளில் புகையிலை விற்ற 2 வியாபாரிகள் கைது
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் மற்றும் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வேலப்பாடி கிராமத்தை சேர்ந்த ஜெயராஜ் (வயது 43) என்பவரின் கடையில் 270 புகையிலை பாக்கெட்டுகளும், ஆரணி மணியம்மை தெருவை சேர்ந்த கர்ணன் (35) என்பவரின் கடையில் 23 புகையிலை பாக்கெட்டுகளும் இருந்தன. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கண்ட இருகடை வியாபாரிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 April 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...