/* */

குழந்தைகளின் விளையாட்டால் விபரீதம்; சிலிண்டர் வெடித்து தாய் உயிரிழப்பு

ஆரணி அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் சமையல் காஸ் திறந்து விட்டதில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குழந்தைகளின் விளையாட்டால் விபரீதம்; சிலிண்டர் வெடித்து தாய் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஆரணி அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் சமையல் காஸ் திறந்து விட்டதில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஒண்டிக்குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், (வயது 31 ) லாரி டிரைவர். இவரது மனைவி சரிதா, வயது 28. இவர்களுக்கு சஞ்சய், (வயது 5) தாரணிகா (வயது 3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 26 ம் தேதி வீட்டில் குழந்தைகள் விளையாடியபோது, காஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளனர். இதை அறியாமல், அன்று மாலை சரிதா டீ போடுவதற்காக தீக்குச்சியை உரசினார். அப்போது குபீரென தீப்பிடித்து அறை முழுதும் பரவியது. சரிதா மீது தீ பரவி படுகாயமடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தால் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 July 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா