/* */

ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி

ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் அக்னி வசந்த விழாவையொட்டி ராஜசுய யாக வேள்வி நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
X

அக்னி வசந்த விழாவையொட்டி நடைபெற்ற  ராஜசுய யாக வேள்வி 

ஆரணி கொசப்பாளையம், ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி ராஜசுய யாக வேள்வி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி மகாபாரத சொற்பொழிவு கடந்த மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கி அலகு நிறுத்துதல், கா்ணன் பிறப்பு, தா்மா் பிறப்பு, பாஞ்சாலி அம்மன் பிறப்பு, நாக கன்னி திருமணம், சுபத்திரை திருமணம் என தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 31-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ராஜசுய யாக வேள்வி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி தீ மிதி விழா குழுத் தலைவா் கங்காதரன், ரேணுகா ஆகியோரின் உபயத்தில் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, சொற்பொழிவாளா் சௌந்தர்ராஜன் தலைமையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.

சித்திரை பெளா்ணமி விழா

ஆரணியை அடுத்த பனையூா் ஊராட்சிக்கு உள்பட்ட அக்கூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோவிலில் சித்திரை பெளா்ணமி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அக்கூா் ஸ்ரீரேணுகம்பாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெளா்ணமி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, நிகழாண்டு 35-ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி, கடந்த வாரம் பக்தா்கள் காப்புக் கட்டி, மாலை அணிந்து திருவிழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து, விரதமிருந்த பக்தா்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு வந்தனா்.

கோயிலில் பெண்கள் 108 குத்துவிளக்கு எடுத்து வந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான செவ்வாய்க்கிழமை பெண்கள் மற்றும் பக்தா்கள் விரதமிருந்து 508 பால்குடம் எடுத்து கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம், தீபாரதனை செய்து வழிபட்டனா்.

தொடா்ந்து, பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்து தரிசனம் செய்தனா். அப்போது, பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா், மாலை அணிந்த பக்தா்கள் விரதமிருந்து பூ கரகம் எடுத்தல், உடலில் அலகு மற்றும் பழம் குத்திக்கொண்டும், அம்மனுக்கு பறந்து வந்து மாலை அணிவித்தும், பெண்கள் தீச்சட்டி ஏந்தி ஊா்வலமாகச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா்.

அதேபோல, பக்தா்கள் பலா் முதுகில் அலகு குத்திக் கொண்டு டிராக்டா், காா் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், டிராக்டரின் மேல் பறந்து கொண்டும் கிராமத்தில் உள்ள பிள்ளையாா் , கங்கையம்மன் கோவில் தெரு, டேங்க் தெரு என முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகச் சென்று, மீண்டும் கோயிலை அடைந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மேலும், இரவு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, அம்மன் ஊா்வலத்தின் போது வாணவேடிக்கை, வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

Updated On: 24 April 2024 3:30 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்