/* */

கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு

கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

கண்ணமங்கலம் அருகே ரயில்வே மேம்பாலம்: அதிகாரிகள் நேரில் ஆய்வு
X

கண்ணமங்கலம் அருகே கட்டப்படும்  ரயில்வே உயர் மட்ட மேம்பாலம்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் நிலையில், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அப்பணிகளை ஆய்வு செய்தார். கீழ் பள்ளிப்பட்டு வல்லம் பஞ்சாயத்துகளில், ரயில்வே உயர் மட்ட மேம்பாலம் அமைய உள்ள பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர், நில எடுப்பு குறித்தும், இழப்பீடு வழங்குதல் குறித்தும் நில உரிமையாளர்களிடம் பேசினார்.

பின்னர், நிலஅளவு குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வட்டாட்சியர் செந்தில், மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர், வல்லம் பேரூராட்சி தலைவர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனிருந்தனர்.

Updated On: 22 Oct 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?