/* */

ஆரணியில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆரணியில் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

ஆரணியில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம்
X

ஆரணியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி குறித்த ஆலோசனைகூட்டம் 

ஆரணி நகர காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆரணி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், பேசும்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குழுவாக சுவாமி வழிபாடு நடத்துவதை தவிர்க்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க கூடாது. அவரவர்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும். கோயில்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய இந்து முன்னணி, பாரதிய ஜனதா பிரமுகர்கள் எங்களுக்கு சொந்தமான இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவோம் என தெரிவித்தனர்.

இக்கருத்துக்களை எழுத்துப்பூர்வமாக வாங்கிக்கொண்ட நகர காவல் ஆய்வாளர், அவர்கள் கோரிக்கைகளை மாவட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பிவைத்து தக்க முறையில் தீர்வு காண ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Updated On: 25 Aug 2021 5:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  2. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  4. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  5. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  6. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  8. ஈரோடு
    அந்தியூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு