/* */

அப்பநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் அதிகாரம் பறிப்பு

பெரும்பான்மை இல்லையென இணை கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளதாக அப்பநல்லூர் ஊராட்சி துணைத்தலைவர் துணை கலெக்டரிடம் மனு

HIGHLIGHTS

அப்பநல்லூர் ஊராட்சியில் துணைத்தலைவர் அதிகாரம் பறிப்பு
X

கூடுதல் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அப்பநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்தார்த்தன் , மற்றும் உறுப்பினர்கள்

மேற்கு ஆரணி ஒன்றியம் அப்பநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சித்தார்த்தன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அப்பநல்லூர் ஊராட்சி நிர்வாகத்தில் நிர்வாக ரீதியாக எந்த குற்றச்சாட்டு இல்லாமலும், எந்தவிதமான நிதிமுறைகேடு, நிதி இழப்பு போன்ற குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் நேர்மையான முறையில் என்னுடைய பணியை செய்து வருகிறேன்.

ஆனால் துணைத்தலைவருக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி எனக்கு இணை கையொப்பம் இடும் அதிகாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஊராட்சி மன்றத்தில் எந்தவிதமான தீர்மானமும் இல்லாமல் கையொப்பம் இடும் அதிகாரம் பறிக்கப்பட்டு உள்ளது.

இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டால் எந்தவிதமான பதிலையும் எழுத்துப்பூர்வமாக என்னிடம் வழங்கவில்லை.

மேலும் மன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையை நிருபிக்க நான் தயாராக உள்ளேன். எனவே இந்த மனு மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே துணைத்தலைவராகிய எனக்கு மீண்டும் காசோலை மற்றும் ஊராட்சியின் பதிவேடுகளில் இணை கையொப்பம் இடும் வாய்ப்பை மீண்டும் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்

Updated On: 8 May 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  3. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  4. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  5. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  8. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  9. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  10. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி