/* */

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
X

வந்தவாசியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த வாக்காளர்கள்

தமிழ்நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அதையொட்டி, திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கான திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதியில் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

முதல் முறை வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற காலையிலிருந்து ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர்..

ஆரணி தொகுதியில் 1,760 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆரணி தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,34,341 ஆண்கள், 7,61,673 பெண்கள், 104 இதர வாக்காளா்கள் என 14,96,118 போ் ஆகும்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் கணேஷ் குமார் ,நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மட்டுமின்றி 29 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் ஆரணி ,போளூர் ,வந்தவாசி, செய்யாறு, மயிலம், செஞ்சி, உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியது ஆகும்.

இதில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக மாலை 6 மணி வரை நடைபெற்று நிறைவடைந்தது.

வாக்கு மையங்களில் வாக்கு பதிவு நிறைவடைந்த உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில் சீல் வைத்து அனுப்பும் பணியினை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி பொறுத்தவரையில் 73.77. சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆரணி நாடாளுமன்றத் தேர்தலில் 78.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட தற்போது 5.17 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 April 2024 1:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  3. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  4. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  8. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  9. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  10. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!