/* */

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 80 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணி அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
X

ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி வழியாக கஞ்சா கடத்தி வருவதாக திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமராஜ் தலைமையிலான போலீசார் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக மூட்டையுடன் நடந்து வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அவர்கள் கொண்டுவந்த கோணிப்பையில் சுமார் 80 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திருத்தணி அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த சதீஷ், தானப்பன் என்கின்ற பிரபு என்பது தெரிந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 6 April 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  2. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  3. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  4. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  5. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  6. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  7. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  8. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  9. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  10. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!