/* */

திருத்தணி அருகே தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது!

திருத்தணி அருகே தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது; டிராக்டர் மற்றும் மினி வேன் பறிமுதல் - திருவள்ளூர் மாவட்ட சிறப்பு காவல் பிரிவு அதிரடி.

HIGHLIGHTS

திருத்தணி அருகே தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முத்துக் கொண்டாபுரம் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிறப்பு காவல் பிரிவினர் நேற்று இரவு கொசஸ்தலை ஆற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது மணல் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த முத்துக் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். அதேபோல மணல் கடத்தலுக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த மினி வேனையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர். கனகம்மாசத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முத்துக் கொண்டாபுரம் கொசஸ்தலை ஆற்றில் தொடர் மணல் கொள்ளையை காவல்துறையினர் கண்டுகொள்ளாததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு தொடர மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 25 Aug 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  4. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  5. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  6. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  7. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  10. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்