/* */

திருவள்ளூரில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிய எம்.எல்.ஏ., கலெக்டர்

திருவள்ளூரில் வீடுகளில் தேசிய கொடியை எம்.எல்.ஏ. விஜி ராஜேந்திரன், கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் ஏற்றினர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் வீடுகளில் தேசிய கொடி ஏற்றிய எம்.எல்.ஏ., கலெக்டர்
X

திருவள்ளூரில் வீடு வீடாக தேசிய கொடி ஏற்றுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சென்றனர்.

75வது சுதந்திர தின விழா வருகின்ற 15 ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன், ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் ஆகியோர் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகளுடன் வீடு வீடாகச் சென்று தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நடந்து சென்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் அப்பகுதி உள்ள மக்கள் அனைவரையும் தவறாமல் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவன் தனது வீட்டிற்கு வந்து தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதை தொடர்ந்து எம்.எல்.ஏ வி.ஜி. ராஜேந்திரன் சிறுவனின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக அச்சிறுவன் வீட்டுக்கு சென்று தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மேலும் அச்சிறுவனின் தேச பக்தியை எம்.எல்.ஏ மற்றும் ஆட்சியர் வெகுவாக பாராட்டினர். அவருடன் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி மற்றும் நகராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர். அதற்கு முன்னதாக திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் என் குப்பை என் பொறுப்பு என்பதை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வுயில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பேரணியை ஆட்சியர்ஆல்பீ ஜான் வர்கீஸ் நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

Updated On: 14 Aug 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  2. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  4. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  9. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!