/* */

போதை நபரை கைது செய்யக்கோரி மளிகை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் அருகே போதை நபரை கைது செய்யக்கோரி மளிகை வியாபாரிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

போதை நபரை கைது செய்யக்கோரி மளிகை வியாபாரிகள் முற்றுகை போராட்டம்
X

திருவள்ளூர் அருகே காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் கூடப்பாக்கம் கலெக்டர் நகர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் தேவராஜ்(52) இவர் கடைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் வந்த நபர் ஒருவர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். கடையின் உரிமையாளர் பணம் தர மறுக்கவே கஞ்சா போதையில் கற்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு கடையில் இருந்த ஒரு சில பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கே இருந்து சென்றுள்ளார். பின்னர் இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் வெள்ளவேடு காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார்.

புகார் கொடுத்து ஒரு வார காலமாகியும் இதுவரை கத்தி கற்களால் தாக்கிய போதை ஆசாமி மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள் சங்கத்தினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து வியாபார சங்கத்தினர் அங்கிருந்து கலந்து சென்றனர். மேலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த வியாபாரிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

Updated On: 24 Aug 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...