/* */

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள் போட்ட மனு

தொழுவூர்ஊராட்சியில் புள்ள பூங்காவை சீர் செய்யக்கோரி கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள் போட்ட மனு
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் மனு போட்ட இளைஞர்.

திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டியில் பொது மக்கள் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சியில் சுமார் 3.ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகரில் அம்மா விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது.


இந்த பூங்காவை தொழுவூர் கிராம பொதுமக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராம மக்களும் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கே சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கு வாலிபால்கள் திடல், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு பெரியோர்கள் நடைபயிற்சி செய்வதற்கும், கராத்தே மற்றும் யோகா வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் பூங்காவில் தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அவை கடிப்பதால் டெங்கு, மர்ம காய்ச்சல் போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால்

இந்த விளையாட்டுப் பூங்காவை உடனடியாக சீரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 100 க்கும் மேற்பட்ட தொழுவூர் கிராம பொதுமக்கள் ஒன்று கூடி திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் அவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள பூங்காவை சீர் செய்து தர வேண்டும் என கோரி எழுதப்பட்டு இருந்த மனுவை போட்டுவிட்டு சென்றனர்.

Updated On: 17 April 2024 5:38 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  7. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  9. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  10. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது