/* */

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர்

ஊத்துக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

HIGHLIGHTS

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர்
X

மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் நாசர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊத்துக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு சுமார் 25 லட்சம் மதிப்பில் 492 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பெருமக்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊத்துக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் பலகையை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.

Updated On: 23 Aug 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்