திருவள்ளூரில் 1551 பேருக்கு கொரோனா, 22 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, மேலும் டிஸ்சார்ஜ் 1752 என நிர்வாகம் தகவல்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 1551 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 1752 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 7730 ஆக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,022 ஆகவும், இதில் 70,292 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.