/* */

தாம்பரம் வெளி வட்டச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சென்னை, மதுரவாயல் டோல்கேட் அடுத்து செல்லும் தாம்பரம் வெளி வட்டச் சாலையில், வாகனங்கள் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

HIGHLIGHTS

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழ்நிலையில், இன்று காலை 4 மணியிலிருந்து வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகளும் மற்றும் வாகன ஓட்டிகளும் தாம்பரம் வெளி வட்டச் சாலையில் பயணித்து கொண்டிருந்த போது, திடீரென போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களை நிறுத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேல் அப்பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த போக்குவரத்து நெரிசல் எதனால் ஏற்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, தமிழக முதல்வர் இந்த பாதையை கடந்து செல்கிறார். எனவே, வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறினர்.

முதல்வர் அப்பகுதியை கடந்து சென்றபின் மீண்டும் பாதை திறந்து விடப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதனால் 2 மணி நேரத்துக்கும் மேல் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Updated On: 28 April 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...