/* */

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5டன் ரேஷன் அரிசி பறிமுதல் ,ரேஷன் கடை ஊழியர்கள் கைது

பொன்னேரியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ரேஷன் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5டன் ரேஷன் அரிசி பறிமுதல் ,ரேஷன் கடை ஊழியர்கள் கைது
X

ரேஷன் கடை பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆலாடு கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையின் அருகே மினி லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி ஏற்றப்படுவதாக பொன்னேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து லாரியுடன் 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்த முயன்ற ரேஷன் கடை ஊழியர்கள் தாமோதரன், செல்வராஜ் ஆகிய இருவரை கைது செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Updated On: 5 Sep 2021 2:14 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்