/* */

ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: ஆரணியில் முகக்கவசம், உணவு வழங்கல்!

ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆரணியில் தூய்மை பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் உணவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ராஜீவ் காந்தியின் நினைவு தினம்: ஆரணியில் முகக்கவசம், உணவு வழங்கல்!
X

தூய்மைப்பணியாளர்களுக்கு உணவு, முகக்கவசம் வழங்கியபோது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜீவ்காந்தியின் 30ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஆரணி பஸ் நிறுத்தம் அருகே ராஜிவ் காந்தியின் திருவுருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் எம். ஹேமபூஷனம், வழக்கறிஞர்கள் கே. குமார், டி. அருள் ஆகியோர் மற்றும் கூட்டணிக் கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆரணி பேரூராட்சியில் பணியாற்றும் 50 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய பொதுமக்கள் என 200 பேருக்கு அன்னதானமும், 500 பேருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

Updated On: 21 May 2021 1:42 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  2. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  3. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  4. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  6. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  8. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  9. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  10. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!