/* */

காஞ்சிபுரத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரத்தில் சமரச மையம் மூலம் வழக்குகளில் தீர்வு முறை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
X

காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் சார்பில் சமரச மையம் குறித்த பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் சார்பில் சமரச மையங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி யு.செம்மல் துவக்கி வைக்க, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்தியா முழுவதும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி தேங்கி உள்ள சிறு வழக்குகளை முடித்து வைப்பதற்காக உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை சமரசம் மையத்திற்கு அனுப்பி இரு தரப்பினருக்கும் எந்தவித இழப்பும் இல்லாமல் சமரசத்தின் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதனால் வழக்காடிகளுக்கான இரு தரப்பு உறவுகளும் மேம்பட வழி செய்கிறது.


மேலும் இந்த சமரசம் மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகளுக்கு பிறகு மேல்முறையீடு இல்லை எனவும் இதற்காக செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படுகிறது . இந்த வழிகாட்டுதல் நெறிமுறகைளை பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் சமரச மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொது மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியது.

அவ்வகையில் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி யு.செம்மல் தலைமையில் சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை துவக்கி வைத்த மாவட்ட நீதிபதி செம்மல், உடன் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் பேரணியாக சென்று பொதுமக்களுக்கு சமரச மையங்கள் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 11 April 2024 11:04 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!