/* */

பொன்னேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

பொன்னேரி நகராட்சியில் முன்னாள் எம்எல்ஏ பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

HIGHLIGHTS

பொன்னேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு
X

பொன்னேரி நகராட்சியில் முன்னாள் எம்எல்ஏ பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து இரட்டை இலைக்கு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து வரும் 19ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி இன்னும் மூன்று நாட்கள் உள்ளதால் முக்கிய கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் அதிமுகவினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் பொன்னேரி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான சிறுனியம் பலராமன் தலைமையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 27 வார்டு வேட்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுதுரை, நகர செயலாளர் உபயதுல்லா, பொன்னேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் சங்கர், அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், மற்றும் கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பிற அணி முக்கிய நிர்வாகிகள் கூட்டணி கட் சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து இரட்டை இலைக்கு வாக்களிப்பதாக தெரிவித்தனர்.

Updated On: 16 Feb 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...