Begin typing your search above and press return to search.
தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் புகார்
சோழவரம் அடுத்த காரனோடை பஜார் பகுதியில் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது இளம் பெண் போலீசில் புகார் கொடுத்தார்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் காலனி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (42) இவர் நேற்று மகள் மீனாவுடன் காரனோடை பஜார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் இளம் பெண்ணைதகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாகவும் அதை தட்டி கேட்டபோது பெண்ணின் தந்தையை தாக்கி, கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து லட்சுமி சோழவரம் காவல் நிலையத்தில் இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் முருகன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.