/* */

மத்திய பாதுகாப்புப்படை ஊழியர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் துவக்கினார்

ஆவடி மத்திய பாதுகாப்புபடை ஊழியர்களுக்கு தடுப்பூசி மையத்தை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

மத்திய பாதுகாப்புப்படை ஊழியர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் துவக்கினார்
X

ஆவடி பாதுகாப்பு படை ஊழியர்களுக்கு கொரோன தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் ஆவடி மாநகராட்சி கொரோனா தடுப்பூசி மையம், கொரோனா தடுப்பு மையம் என தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், ஆவடியில் செயல்படும் மத்திய பாதுகாப்பு தொழிற்சாலைகளான எச்.வி.எப், ஓ.சி.எப், எஞ்சின் பேக்டரி ஆகிய தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு தடுப்பூசி போடும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.பின்னர் பேசிய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஆவடி மாநகராட்சியில் உள்ள பாதுகாப்பு தொழிற்சாலையில் பணியாற்றக் கூடிய 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிப் போட இந்த தடுப்பூசி மையம் துவக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் பயனடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 26 May 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!