/* */

ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 6 வயது சிறுவன்

6 வயதில் 11 மற்றும் 12 - வகுப்பில் பயிலும் வேதியியல் கனிமங்களின் பெயர்களை 1நிமிடம் 33 விநாடிகளில் கூறி சாதனை படைத்தார்

HIGHLIGHTS

ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 6 வயது சிறுவன்
X

ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற 6 வயது சிறுவன் சதுர்கிருஷ் ஆத்விக்

1.33 நிமிடத்தில் 12 ம் வகுப்பு பாடத்தில் உள்ள 10 தொகுப்புக்கான கனிம அட்டவணையில் உள்ள பெயர்களை கூறி ஆசிய புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பெற்ற 6 வயது சிறுவன். இது வரை 3 விதமான சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த நிலையில் மாவட்ட ஆட்சியர் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியை சேர்ந்தவர் பிரபுராஜ்- ஆர்த்திஹரிப்பிரியா தம்பதியினர் மருத்துவர்களாக உள்ளனர். இவர்களது மகன் சதுர்கிருஷ் ஆத்விக். இவர் தனது குழந்தை பருவம் முதல் தொடர் சாதனைகளை நிகழ்த்தி வரும் இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது 3 வயது முதல் உலகப்பொதுமறை நூலான திருக்குறளை ஆர்வமுடன் கற்றுவருகிறார். அதன் விளைவாக 4 வயதில் 53 திருக்குறளை 3 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனை நிகழ்த்தினார்.

தொடர்ந்து அடுத்த சாதனை முயற்சியாக 100 திருக்குறளை 5 நிமிடம் 40 நிமிடங்களில் கூறி சாதனை நிகழ்த்தினார். இந்த சாதனைகளை இந்தியா புக் ஆப் ரிக்காட்ஸ், டிரயம்ப் வேல்டு ரிக்காட்ஸ், கிளோபல் ரிக்காட்ஸ் அன்டு ரிசர்ச்சு பவுன்டேஷன் ஆகியவை அங்கிகரித்து கேடயம் மற்றும் சான்றிதளை பரிசளித்துள்ளது.

தற்போது தனது 6 வயதில் 11 மற்றும் 12 - வகுப்பில் பயிலும் வேதியியல் கனிம அட்டவணையில் உள்ள 10 தொகுப்பான கனிமங்களின் பெயர்களை 1நிமிடம் 33 விநாடிகளில் கூறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை ஆசியா புக் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது . இது தவிர இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தலைநகரம், உலக நாடுகளின் தலைநகரங்கள் என கூறி பதக்கங்களும், பரிசு கோப்பைகளும், விருதுகளும் வாங்கி குவித்துள்ளார். இளம் வயதில் சாதனை மேல் சாதனை நிகழ்த்தி வரும் சிறுவனை நெல்லை மாவட்ட ஆட்சியர விஷ்ணு நேரில் அழைத்து பாராட்டி ஊக்கப்படுத்தியுள்ளார்.தமிழ்மேல் கொண்ட பற்றின் காரணமாக 1330 திருக்குறளையும் குறைந்த நேரத்தில் கூறி சாதனை படைக்க வேண்டும் என்பதே சாதனை சிறுவனின் லட்சியம் என்கின்றனர் பெற்றோர்கள்.


Updated On: 4 Sep 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...