/* */

காவல்துறை , துணை ராணுவபடை கொடி அணிவகுப்பு

காவல்துறை , துணை ராணுவபடை கொடி அணிவகுப்பு
X

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவபடையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

வருகின்ற சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., மணிவண்ணன் தலைமையில் தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல தாழையூத்திலிருந்து தொடங்கி தென்கலம் விளக்கு, சங்கர்நகர் பாலம், ராஜவல்லிபுரம் இரயில்வே கேட், மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வந்து தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.

இதேபோல் கொடி அணிவகுப்பு மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட யூனியன் அலுவலகத்தில் தொடங்கி மானூர் பஜார் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மானூர் பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது. கொடி அணிவகுப்பில் திருநெல்வேலி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அரச்சனா, எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி நரேந்திரன், தாழையூத்து இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை, மானூர் இன்ஸ்பெக்டர் ராமர், சப்இன்ஸ்பெக்டர்கள், மற்றும் அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர் 64 பேர், மற்றும் 40 உள்ளூர் போலீசார் உட்பட 104 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட எஸ்பி., பேசுகையில், ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பதட்டமான பகுதிகளில் நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் அச்சமின்றி அவர்களது ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் யாரும் பணம் அல்லது பொருட்களை வாங்கிகொண்டு வாக்களிக்க வேண்டாம், நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

Updated On: 2 March 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்