/* */

பழவூர் நாறும்பூநாதர் கோயில் பங்குனி உத்திர திருவிழா ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

பழவூர் நாறும்பூநாதர் கோயில்  பங்குனி உத்திர திருவிழா ஆலோசனை கூட்டம்
X
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும்பூநாதர் கோவில் பங்குனி உத்திர விழா பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

நெல்லை மாவட்டம் பிரசித்திபெற்ற பழவூர் அருள்மிகு நாறும் பூநாதர் சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் திருக்கோவிலில் வைத்து இந்துசமய அறநிலையத்துறை தக்கார்/செயல் அலுவலர் ராதா முன்னிலையில் நடந்தது.

இக்கூட்டத்தில் வரும் மார்ச் 10ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழாவை நடத்துவது, அரசு மற்றும் இந்துசமய அறநிலையத்துறையின் விதிமுறைகளுக்குட்பட்டும், அனைத்து விதிகளுக்கும் உட்பட்டு திருவிழாவை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதில் கிராம நல முன்னேற்ற சங்க தலைவர் பழவூர் இசக்கியப்பன்,வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் பாண்டித்துரை, பஞ்சாயத்து தலைவி சுப்புலெட்சுமிகுமார், மண்டகப்படி கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 1 March 2022 11:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது