/* */

சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

சி.ஐ.டி.யு. சார்பில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
X

நெல்லை வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூய்மை பணியாளர்களை தனியாரிடம் விடும் அரசின் முடிவை கண்டித்தும், தினக்கூலி சுய உதவி குழு ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஊதியம் சட்டப்படி அரசு அமைத்துள்ள தினசரி ரூபாய் 700 சம்பளத்தை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிறைவேற்றவேண்டும். தினக்கூலி சுய உதவி குழு ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போதுமான தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் ஆட்களை குறைக்கக்கூடாது. தூய்மை பணியாளரிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தையும், நிர்வாகம் செலுத்த வேண்டிய ஈ பி எஃப் பணத்தையும் முழுமையாக ஈபிஎப் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். அனைத்து தூய்மை பணியாளருக்கும் சீருடை வழங்க வேண்டும். முன் களப்பணியாளர் அறிவிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு தொற்றுக்கான நிவாரண நிதியாக ரூபாய் 15,000 உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மோகன் கூறும்போது

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் இன்று போராட்டம் நடத்தி வருகிறோம். தமிழக அரசு இதுவரை தூய்மை பணியாளர்களை கண்டுகொள்ளவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அடுத்த மாதம் நடத்துவோம் ஈடுபடுவோம் என்றார்.

Updated On: 24 Jan 2022 1:31 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது