/* */

நெல்லை : ஒன்றிய திமுக கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்

HIGHLIGHTS

நெல்லை :  ஒன்றிய திமுக  கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை
X

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் மாவட்டச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட சேரன்மகாதேவியில் திமுக சார்பில் சேரன்மகாதேவி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு, ராஜகோபால் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர செயலாளர் மனிஷா செல்வராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் சபாநாயகரும், மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் பேசியதாவது: வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் திமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதில், சேரன்மகாதேவி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள், கிளை செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 July 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது