/* */

பாப்பாகுடி திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் நந்தவனம் மாதிரி தொடக்க விழா

நெல்லை பாப்பாகுடி திருக்கடுகை மூன்றீஸ்வரர் திருக்கோவில் நந்தவனம் தொடக்க விழா ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாப்பாகுடி திருக்கடுகை மூன்றீஸ்வரர் கோவிலில் நந்தவனம் மாதிரி தொடக்க விழா
X

பாப்பாகுடி அருகே திருக்கடுகை மூன்றீஸ்வரர் திருக்கோவில் நந்தவனம் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 திருக்கோவில்களில் மாதிரி நந்தவனம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பாப்பாகுடி அருகே அருள்மிகு திருக்கடுகை மூன்றீஸ்வரர் திருக்கோவில் நந்தவனம் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 திருக்கோவில்களில் மாதிரி நந்தவனம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்ற பொன்மொழியை மெய்ப்பிக்கும் நோக்கில், நம் முன்னோர்கள் ஆலயம் சென்று தொழும் மக்கள் சகல நன்மையும் பெற வேண்டும் என்பதற்காகவே கோவில் பிரகாரங்களில் நந்தவனம் அமைத்தல், கோவில் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், மூலிகை தோட்டங்கள் ஏற்படுத்துதல் மற்றும் தல மரக்கன்றுகள் பராமரித்தல் போன்ற பயன்படக்கூடிய செயல்களை செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 2 கோவில்களில் நந்தவனங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு இன்று துவங்கப்பட்டுள்ளது. நந்தவனத்தில் சுத்தமான காற்று, நோயைத் தீர்க்கக் கூடிய மூலிகைகள், மன அமைதி என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான தல மரங்களும் இந்த நந்தவனத்தில் நட்டு வளர்க்கப்பட உள்ளது, மேலும், கோவில்களில் பாரம்பரியமாக வளர்க்கப்பட்ட மரங்களும் வளர்க்கப்பட உள்ளது. அரசு, வில்வம், புளி, பூவரசு, வேங்கை, மருது, இலுப்பை, நாவல், பன்னீர், செம்மரம், சந்தனம், மந்தாரை என 40 வகையான பாரம்பரிய மரங்கள் தற்போது நடப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி வருவாய் கோட்டாட்சியர் கி. சிந்து, ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை தி. சங்கர்,. பாப்பாக்குடி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியன், தாசில்தார் செல்வம், செயல் அலுவலர், திருக்கடுகை மூன்றீஸ்வரர் திருக்கோவில் மு. கிருஷ்ணவேணி, மற்றும் மூத்த ஆய்வாளர், அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் மு. மதிவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 11 Dec 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது