/* */

திருச்சி அருகே சொத்து தகராறில் ஒருவர் கொலை: ஒருவர் கைது

குடும்ப சொத்து தகராறில் பெரியப்பாவை கொலை செய்து விட்டு தப்பியோடிய மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே சொத்து தகராறில் ஒருவர் கொலை: ஒருவர் கைது
X

ஆறுமுகம்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அடுத்த ஆர்.கோம்பை கிராமம் காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர்கள் சிக்ககவுண்டர்- பழனியம்மாள் தம்பதி. இவர்களது மகன்கள் ஆறுமுகம் (வயது 55) மற்று முருகேசன் (50) ஆகிய 2 பேர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிக்ககவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஆறுமுகம் தனியார் கல்லூரியில் பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். முருகேசன் மாற்றுத்திறனாளி ஆவார். இந்நிலையில் குடும்ப சொத்துக்கள் பிரிக்கப்பட்டு ஆறுமுகம், முருகேசனுக்கு இன்னும் முறையாக சொத்தை எழுதிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆறுமுகம் தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நடந்த சொத்து தகராறில் ஆறுமுகம், தாய் பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த முருகேசனின் மகன் மருதுபாண்டி (27) என்பவர், அருகில் இருந்த அரிவாளை எடுத்து ஆறுமுகத்தின் கழுத்தில் சரமாரி வெட்டியுள்ளார். இதில் கழுத்து பாதி துண்டாகி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி.சுஜித்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து மருது பாண்டியை தேடி வருகிறார். மேலும் ஆறுமுகத்தின் மனைவி பழனியம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு மணிகண்டன் (வயது 30) என்ற ஒரு மகன் இருப்பது போலீசார் விசாரணையில் தெரிகிறது. இந்நிலையில் இந்த கொலை சம்பந்தமாக மணிகண்டன் (30), கண்ணன் (35) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சொத்து தகராறில் பெரியப்பாவை தம்பி மகன் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 16 Jan 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை