/* */

புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது: 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

தூத்துக்குடி சிதம்பரம்நகர் பகுதியில் நகை கடையை துளையிட்டு கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் 4 மணி நேரத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது: 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு
X

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள்.

தூத்துக்குடியில் நகை கடையின் சுவற்றில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி நகைகள் திருடிய 4 பேரை 4 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி பிரையண்ட்நகரை சேர்ந்தவர் முருகன் இவர் சிதம்பரம் நகர் பிரதான சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல வியாபாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டுக்கு சென்ற முருகன் திங்கள்கிழமை காலை கடையை திறந்தபோது கடையில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. கடையின் உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க சுவரில் துளையிட்டு கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சோதனை செய்தபொது கடையின் பின் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் உள்ள சூலாயுதத்தை எடுத்து சுவற்றில் துளையிட்டு கடைக்குள் சென்று நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தென்பாகம் போலீசார் கடை மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கடையில் இருந்த 3 கிலோ வெள்ளி மற்றும் 2 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது விசாரணையில் சிசிடிவு உதவியால் நகை திருட்டு தொடர்பாக தூத்துக்குடி லோகோ நகரை சேர்ந்த முனியசாமி வயது இருபத்தி நான்கு, பிரையண்ட் நகர் 4வது தெருவில் சேர்ந்த சதீஷ் வயது 20, லெவிஞ்சிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சுடலையாண்டி வயது 29, மற்றும் 17 வயது இளம் சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். திருட்டு சம்பவம் நடந்த 4 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்த போலிசாருக்கு மாவட்ட கண்காணிப்பு பலர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

Updated On: 19 April 2022 2:36 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  6. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  7. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  9. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  10. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!