/* */

திருவிடைமருதூர் அருகே பேருந்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு

திருவிடைமருதூர் அருகே பேருந்தில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவிடைமருதூர் அருகே பேருந்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான சேரன். 

திருவிடைமருதூர் வட்டம், கோட்டூரை சேர்ந்தவர் முருகையன் மகன் சேரன் (23). அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித் (24). இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் இரவு இரண்டு சக்கர வாகனத்தில் கஞ்சனூர் நோக்கி சென்றுள்ளனர். அப்போது துகிலி சாலை திருப்பத்தில் கும்பகோணத்தில் இருந்து குத்தாலம் நோக்கி வந்த அரசு பேருந்து மீது பைக் மோதி உள்ளது.

இதில் பேருந்தின் சக்கரத்தில் பைக் சிக்கியதால் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் சேரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் படுகாயமடைந்த ரஞ்சித், கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பந்தநல்லூர் போலீசார், சேரன் உடலை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 29 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்