/* */

கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை மிரட்டிய மூன்று இளைஞர்கள் கைது

தஞ்சை அருகே கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை மிரட்டிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணை மிரட்டிய மூன்று இளைஞர்கள் கைது
X

தஞ்சை அருகே வல்லம் மின்நகர் பகுதியை சேர்ந்த முகமது அலி என்பவரின் மகன் முபாரக் (25). இவரது தந்தை புருணை நாட்டில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இங்கு கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த வசந்தன் என்பவரின் மனைவி சாந்தா (42) பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் புருணையில் இருந்த போது முபாரக்கிற்கும் சாந்தாவிற்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக முபாரக் எடுத்துள்ளார்.

பின்னர் வீடியோவை காட்டி சாந்தாவை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார் முபாரக். வல்லம் தேவாரம் நகர் ரவிச்சந்திரன் மகன் தினேஷ் (30), மின்நகர் அன்பு மகன் தினேஷ் (26) ஆகியோர் வங்கி கணக்கில் பணம் போடச் சொல்லி மிரட்டி உள்ளார். அந்த வகையில் நவம்பர் மாதம் வரை ரூ.40 ஆயிரத்தை சாந்தா முபாரக் நண்பர்கள் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார்.




இருப்பினும் முபாரக் தொடர்ந்து சாந்தாவை மிரட்டி வந்துள்ளார். நெருக்கமாக உள்ள வீடியோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன். சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார் சாந்தா. இதையடுத்து சாந்தா வல்லம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முபாரக், தினேஷ், மற்றொரு தினேஷ் என மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 5 May 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...