Begin typing your search above and press return to search.
தஞ்சை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்
தஞ்சை மாவட்டத்தில், மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
HIGHLIGHTS
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை, 12 லட்சத்து 28 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் சிறப்பு முகாமில் 1,328 மையங்களில் ஒரு லட்சத்து 16ஆயிரம் நபர்களுக்கு தடுப்பு செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் மூன்றாவது தடுப்பூசி முகாம் 745 மையங்களில் ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலை 7 மணிக்கு துவங்கிய பல்வேறு முகங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாமை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலும் அமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார்.