/* */

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம்

இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் தயாரித்த இயந்திரம் மூலம் தேங்காயிலிருந்து நீர் பிரித்தெடுக்கப்படுகிறது

HIGHLIGHTS

பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டம்: இணையமைச்சர் தொடக்கம்
X

 நாட்டில் முதலாவதாக  பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தஞ்சை மாரியம்மன் கோயிலில் மத்திய இணையமைச்சர் பிரகலாத் சிங்  தொடங்கி வைத்தார்.

இந்தியாவில் முதல்முறையாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கம் திட்டத்தை தஞ்சாவூரில் மத்திய இணையமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஜல்சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் பாட்டேல் 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை தஞ்சை வந்தடைந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் முதல் முறையாக பக்தர்களுக்கு தேங்காய் நீர் பிரசாதம் வழங்கும் திட்டத்தை தஞ்சை மாரியம்மன் கோயிலில் தொடங்கி வைத்தார். இந்திய உணவு பதன தொழில் நுட்பக்கழகம் சார்பில் பிரத்தியேக இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம், தேங்காயில் இருந்து நீர் பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதன் மதிப்பு சுமார் 7 லட்சம் ஆகும். இந்தியாவில் முதல்முறையாக இந்தத் திட்டத்தினை இன்று இணையமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு புகழ்பெற்ற கோயில்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

Updated On: 29 Sep 2021 7:26 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு