/* */

ஆறு மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு: நரபலியா என காவல்துறை விசாரணை?

மீன் வைக்கும் பெட்டகத்தில் 6 மாத பெண் குழந்தை மூழ்கி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

ஆறு மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு: நரபலியா என காவல்துறை விசாரணை?
X

பைல் படம்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர் நசுருதீன். இவரது 6மாத பெண் குழந்தை ஹஜிரா. இந்நிலையில் 6 மாத பெண் குழந்தை ஹஜிரா அவரது வீட்டின் பின்புறம் உள்ள மீன் வைக்கும் பிளாஸ்டிக் தொட்டியில் நீரில் மூழ்கி சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தது. பின்னர் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து பேசி மல்லிப்பட்டினம் பள்ளிவாசலில் அடக்கம் செய்து விட்டனர். இது குறித்து அப்பகுதி தலையாரி சுதாகர் மூலம் கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்துவுக்கு தெரியவந்தது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர், இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 6 மாத பெண் குழந்தை நீர்நிறைந்த மீன் தொட்டியில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்தது எப்படி, மேலும் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா? எனவும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  5. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  6. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...