/* */

குற்றாலம் அருவிகளில் கோடை மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

குற்றாலம் அருவிகளில் கோடை மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்

HIGHLIGHTS

குற்றாலம் அருவிகளில் கோடை மழையால் நீர்வரத்து அதிகரிப்பு
X

கோடை மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதம் சீசன் காலங்களாகும்.

இங்குள்ள குற்றாலம் பேரருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் கடந்த ஒரு மாத காலமாக நீர் வரத்து முழுமையாக நின்ற நிலையில் அனைத்து அருவிகளும் வறண்டு காணப்பட்டது. இதனால் குளிப்பதற்காக வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென்காசி மாவட்டத்தில் கோடைமழை பெய்து வருகிறது. இதே போன்று மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளிலும் கோடை மழை பெய்ததால் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு ஏற்ற வகையில் நீர் வரத் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

Updated On: 10 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  2. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  3. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  4. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  5. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  9. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்