Begin typing your search above and press return to search.
தென்காசி நகர் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தீவிரம்
தென்காசி நகர் பகுதியில் தென்காசி நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் தென்காசி நகர் பகுதியில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியினை காவல்துறையினர் பொது மக்களுடன் சேர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட மலையான் தெருவிற்கு தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் கேட்டுக் கொண்டதின் பேரில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர் உடனடியாக நான்கு கண்காணிப்பு கேமராக்களை வழங்கினார்.
தொடர்ந்து அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க காவல்துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஆய்வாளர் பாலமுருகன் கேட்டுக்கொண்டார்.