/* */

சுரண்டை காமராஜர் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம்!

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி இரண்டாவது மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம்

HIGHLIGHTS

சுரண்டை காமராஜர் கல்லூரியில் கலந்தாய்வுக் கூட்டம்!
X

பட விளக்கம்: கல்லூரி முகப்பு படம்.

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி இரண்டாவது மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி இரண்டாவது மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் குறித்து கல்லூரி முதல்வர் இரா. சின்னத்தாய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் 2023- 24ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல், கணிதம் ஆகிய அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நாளை (ஜூன் மாதம் 12-ம் தேதி) திங்கட்கிழமை நடக்கிறது. வணிக நிர்வாகவியல் (பிபிஏ) மற்றும் வணிகவியல் (பி.காம்) பொருளியல், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 13ம் தேதியும் நடக்கிறது.

விண்ணப்பித்த மாணவ மாணவிகள் அனைவரும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தங்களது 10ம் வகுப்பு சான்றிதழ், +1 மற்றும் +2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், விண்ணப்பித்த படிவம் அசல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் புத்தகம் ஆகியவை அசல் மற்றும் 5 நகல்களுடன் காலை சரியாக 9 மணிக்குள் கல்லூரி வளாகத்திற்கு வந்து வருகை பதிவேட்டில் கையொப்பமிட வேண்டும்.

மேலும் மாணவ மாணவிகள் தங்கள் தர வரிசை பட்டியல் விவரங்களை www.kgac.ac.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 11 Jun 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...