/* */

மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்

குமாரபாளையம் ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

HIGHLIGHTS

மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்
X

குமாரபாளையம் ஓலப்பாளையம் மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஓலப்பாளையம் மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கம்பம் நடப்பட்டு பூச்சாட்டுதலுடன் துவங்கியது.

காவிரி ஆற்றிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறு ஊர்வலமாக தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு வந்தார்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற பொங்கல் வைத்தும், அக்னி சட்டிகள் கைகளில் ஏந்தியும், அலகு குத்தியவாறும் வந்தனர்.

பெண்கள் பெரும்திரளாக பங்கேற்று, மாவிளக்குகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 10 May 2024 1:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...