சிறுமிக்கு பாலியல் தொல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது
தென்காசியில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் மகள், அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம், பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த வீராசாமி என்பவர், திண்பண்டம் வாங்கி தருவதாகக்கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், சிறுமிக்கு வயிறு வலி ஏற்படுவே பெற்றோர், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சிறுமி நடந்த உண்மையை கூறியதன் அடிப்படையில், பெற்றோர் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகார் குறித்து விசாரணை செய்த குற்றாலம் காவல்துறையினர், குற்றச்செயலில் ஈடுபட்ட வீராச்சாமி என்பவரை விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீராச்சாமி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியும், குணராமநல்லூர் பஞ்சாயத்தில் 15-ஆவது வார்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.