/* */

குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்

குற்றாலம் சாரல் திருவிழா 2ம் நாளான இன்று மலர் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று மலர் கண்காட்சி துவக்கம்
X

குற்றாலத்தில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சாரல் திருவிழா துவங்கியது. இரண்டாம் நாள் நிகழ்வான இன்று மலர் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.

இந்த கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். இதில் ஊட்டி ஓசூர் கொடைக்கானல் உள்ளிட்ட பகுதியில் இருந்து வரவைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு தோட்டக்கலை துறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் மலர் கண்காட்சி காய்கறி பழ கண்காட்சிகள் மற்றும் வாசனை திரவிய கண்காட்சிகளும் இடம்பெற்றன.

குறிப்பாக யானை அலங்காரம் மற்றும் பூக்கள் கொண்டு பொம்மை வடிவில் செய்யப்பட்ட உருவங்கள் அலங்காரத்தில் இடம் பெற்றன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். இன்று தொடங்கி மூன்று நாட்கள் இந்த கண்காட்சிகள் நடத்தப்படும் என தோட்டக்கலை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 6 Aug 2022 12:55 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!