ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் சமமான உரிமைகளை திமுக வழங்குகிறது: கனிமொழி
தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ தமிழக மக்களிடையே உள்ள ஒற்றுமையும் சகோதாரத்துவமே காரணம்
HIGHLIGHTS
தமிழகத்தில் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமமான உரிமைகளை திமுக வழங்கிக் கொண்டு இருக்கிறது என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.
தென்காசியில் நடைபெற்ற நகர திமுக செயலாளர் இல்லத் திருமண விழாவில், திமுக மகளிரணி தலைவியும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசியதாவது:
தமிழகத்தில் ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமாக உரிமைகளை, திமுக வழங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க, திராவிட முன்னேற்ற கழக தலைவர்களே காரணம். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக திகழ தமிழக மக்களிடையே உள்ள ஒற்றுமையும் சகோதாரத்துவமே காரணம் என்றார். நிகழ்ச்சிகள், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம். குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.