/* */

கொரோனா விழிப்புணர்வு பணியில் சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர்

பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர்.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு பணியில் சங்கரன்கோவில் நகர் காவல் துறையினர்
X

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சங்கரன்கோவில் காவல் துறையினர்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜின் உத்தரவுபடி, மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் அனைத்து ஊர்களிலும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, நம் நாட்டில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ளதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களின் குடும்பத்தினரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், வெளியே பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அப்போது தான் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Updated On: 30 Aug 2021 4:38 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...