/* */

பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருட்டு

பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருட்டு
X

திருவேங்கடம் அருகே பஸ்சில் சென்ற பெண்களிடம் பணம் திருடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி(40), இவரது உறவினர் ராமலட்சுமி(35). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு அரசு பஸ்சில் சென்றனர். அப்போது பஸ், கலிங்கப்பட்டி அருகே சென்ற போது மகேஸ்வரி தான் வைத்திருந்த பேக்கை பார்த்த போது யாரோ மர்ம நபர் பேக்கை, பிளேடால் கிழித்து அதில் இருந்த ரூ.3700ஐ திருடியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர் ராமலட்சுமியிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய பேக்கை திறந்து பார்த்ததில், பேக்கில் வைத்திருந்த ரூ.2500 பணமும் பிளேடால் கிழித்து திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர்கள் பஸ் கண்டக்டரிடம் கூறியுள்ளனர். உடனே பஸ் பயணிகளுடன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மகேஸ்வரி, ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஓடும் பஸ்சில் பெண்கள் பேக்கில் ரூ.6,200 திருடப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 4 March 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?