/* */

கடையம் அருகே சாமி சிலை சேதம்; போதையில் அட்டகாசம் செய்தவர் கைது

கடையம் அருகே போதையில் சாமி சிலையை உடைத்து சேதப்படுத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடையம் அருகே சாமி சிலை சேதம்; போதையில் அட்டகாசம் செய்தவர் கைது
X

சேதப்படுத்தப்பட்ட சாமி சிலை.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. கடையம் தென்காசி சாலையில் மாதாபுரம் செக்போஸ்ட் பகுதியில் இந்தக் கோவிலின் நுழைவு வளைவு அமைந்துள்ளது. இதனருகே ஒரு உண்டியலும், சிமெண்டினாலான ஓரு முருகன் உருவச் சிலையும் உள்ளது.

இந்நிலையில், இந்த முருகன் சிலையை நேற்று இரவு மர்ம நபரால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தகவலறிந்த கடையம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் சிவக்குமார் என்பவர் மது போதையில் சாலையிலிருந்த தடுப்புகளைச் சாய்த்தும், முருகன் உருவச் சிலையை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து சிவக்குமார் மீது கடையம் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 20 Aug 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?