/* */

கடையத்தில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது

தென்காசி மாவட்டம் கடையத்தில் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கடையத்தில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது
X

வினோத் (எ) முகம்மது நசிப், ரவி (எ) சலீம், ராஜ்குமார்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் சிலை கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் கைது செய்து போலீசார் விசாரணை.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள லட்சுமியூரில் தேவி சக்தி அம்மன் கோவிலில் உள்ள ஐம்பொன் சிலையை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தெற்கு மடத்தூர் பகுதியில் கடையம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த லட்சுமியூரை சேர்ந்த ராஜ்குமார் என்பரை பிடித்து விசாரணை செய்ததில், நாகர்கோவில் அருகே உள்ள தக்கலை பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற முகமது நசிப், சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவி என்ற சலீம் ஆகியோர் ஐம்பொன் சிலையை கொள்ளையடித்து சென்றதும் மேலும் பல பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றதாகவும் ஒப்புக் கொண்டதின் பேரில் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 24 Jun 2022 6:38 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா