/* */

காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

பொதுமக்களின் செல்போன்கள் திருடு போன சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து மீட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

காணாமல் போன செல்போன்களை மீட்டு  உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை
X

சைபர் கிரைம் போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் ஒப்படைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் திருடு போன சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் ஏற்கெனவே கடந்த 6 மாதத்திற்கு முன்பாக 120 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக ரூ 12 லட்சம் மதிப்பில் 60 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கலந்துகொண்டு, கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் செல்போன் திருடு போன சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சைபர் கிரைம் போலீசார் சிறப்பாக செயல்பட்டு ஏற்கெனவே 120 செல்போன்களும் தற்போது 60 செல்போன்களும் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதேபோன்று சைபர் கிரைமில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் மற்ற மாநிலங்களில் சேர்ந்தவர்களாக இருப்பதால் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதுக்கோட்டை காவல்துறை சார்பில் மற்ற மாநிலங்களுக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்யும் பணிக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாநிலங்களுக்கு சென்று குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

மாவட்டத்தில் திருட்டு சம்பவம் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு கிரைம் டீம் அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து திருடு போன நகைகள் இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழக காவல்துறை சார்பில் புதுக்கோட்டை பசுமலைபட்டி பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி தமிழக காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது . எந்த துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு சிறுவனை தாக்கிய உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சிறுவன் உடலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தோட்டா மற்றும் பயிற்சி நேரத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை கிடைப்பதற்கு இன்னும் ஒரு மாத காலம் தேவை என்று அவர்கள் கூறியுள்ளனர் அறிக்கை வந்த பிறகு அந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தப்படும்

உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச் சென்று அங்கு பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினரை காவல்துறையினர் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியும் அவர்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படடு வருகிறது என்றார் மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன்.

Updated On: 1 March 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  2. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
  6. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  7. ஈரோடு
    பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு