/* */

பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே முதியவரை வெட்டிக் கொன்று தீ வைத்து எரித்துக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
X

கொலையான பழனிச்சாமி, பழனிச்சாமியை வெட்டி கொன்று தீ வைத்து எரித்த வழக்கில் கைதான மாசிலாமணி, தமிழன்.

பெருந்துறை அருகே முதியவரை வெட்டிக் கொன்று தீ வைத்து எரித்துக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வெள்ளோடு அருகேயுள்ள புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 72). விவசாயி. இவரது இரண்டாவது மனைவி மரகதம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பழனிசாமிக்கும், மரகதத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி காலை பழனிச்சாமி கருகிய தீ நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்த பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பழனிச்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் அவர் கட்டையால் தாக்கப்பட்டும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் மேட்டுக்கடை அருகே உள்ள வண்ணான்காட்டுவலசுவைச் சேர்ந்த மரகதத்தின் அண்ணன் தங்கமணியின் மனைவி மாசிலாமணியிடம் (வயது 35) போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து முதியவரை வெட்டி கொலை செய்து எரித்தது தெரியவந்தது.

இக்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவித்ததாவது, மாசிலாமணியின் வீட்டிற்கு அருகே தங்கமணியுடன் நூல் மில்லில் வேலை பார்த்து வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழன் (36) என்பவர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அப்போது, மாசிலாமணிக்கும், தமிழனுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இந்நிலையில், தமிழனுக்கு பணத்தேவை ஏற்பட்ட நிலையில், தனது மகளின் சுப நிகழ்ச்சிக்காக வைத்திருந்த 10 பவுன் நகைகளைக் கொடுத்து மாசிலாமணி உதவியுள்ளார். பின்னர், அந்த நகைகளை மாசிலாமணி திருப்பி கேட்டுள்ளார். ஆனால், தமிழனால் தர நீண்ட நாள் ஆகும் என்பதால், உறவினர் யாராவது இறந்தால் தான் விழாவை தள்ளிப் போட முடியும் என திட் டம் தீட்டி, மரகதத்தின் கணவரான பழனிச்சாமியை கொலை செய்ய மாசிலாமணி, தமிழன் ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த 19ம் தேதி இரவு பெருந்துறை பாரவலசில் வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த பழனிச்சாமியை வெட்டி கொலை செய்து, உடலை தீயிட்டு எரித்துள்ளனர். பின்னர், எதுவும் தெரியாதது போல் நாடகமாடினர். மேலும், கொலைக்கு உடந்தையாக மாசிலாமணியின் 17 வயது மகனும் இருந்துள்ளார். இதையடுத்து, மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 26 April 2024 1:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!