Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது
HIGHLIGHTS
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மதியம் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்தநிலையில் மாலை வேளையில் புதுக்கோட்டை நகர் பகுதிகள் உட்பட இச்சடி, செம்பட்டி விடுதி, மாத்தூர், மழையூர், கறம்பக்குடி, மாங்கோட்டை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது
.புதுக்கோட்டை நகர் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று மாலை கருமேகம் சூழ்ந்து புதுக்கோட்டை நகர பகுதி உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.